Saturday, February 13, 2010

என் காதலி..

என் காதலி..


உறக்கம் தொலைந்த
பின் இரவுகளில்,
தொடர்பறுந்த
பிம்பப் பரிமாணங்களாய்
அவள்!


பணி செய்துகொண்டிருக்கையிலும்
என்னை ஆள்பவள்,
அவள்!


இவ்வுலகை ரசிக்க வைத்தவள்,
அவள்!


மனநிலை மாற்றங்களை
மொத்தமாய் குத்தகைக்கெடுத்தவள்
அவள்!


இன்ப, துன்பங்களின்
காரண கர்த்தா
அவள்!


சிரிக்க,
அழ,
வெட்கப்பட வைப்பவள்,
அவள்!


தாயை,
தாய்மையை
உணர வைப்பவள்
அவள்!


நிகழ், எதிர்கால
'அகர முதல'
அவள்!


நினைவினிலும்,
நிஜத்தினிலும்
என்னை முழுவதுமாய்
ஆக்கிரமித்துக்கொண்டு,
அவள்!!


என் காதலி - அந்த 'அவள்' !!!

-நண்பர் ஒருவரின் கவிதை (அப்படா சுட்டாச்சு !)




No comments:

Post a Comment

என்னைப்பற்றி

My photo
தாராபுரம், திருப்பூர் /தமிழ்நாடு, India