Saturday, January 30, 2010

இந்திரா காந்தி


திருப்பூரில் எழாவது புத்தக கண்காட்சி நேற்று (29/01/2010) துவங்கியது ,இரவு ஒன்பது மணியளவில் அங்கே சென்றிருந்த போது கூட்டம் அதிகமில்லை ,ஒரு சில கடைகளில் புத்தகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தர்கள் ,புத்தகங்களை வாங்கியவுடனே படித்து முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்க்க தோன்றும் எனக்கு ,இப்போதெல்லாம் வரலாறுகள் அதிகம் படிக்க பிடிக்கிறது ,சென்ற வாரம் ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தை முடித்தபின் நேற்று எனக்கு கிடைத்த புத்தகம் இந்திரா காந்தி ,R.முத்துக்குமார் பல்வேறு புத்தகங்களில் இருந்து தொகுத்து தமிழில் எழுதியது ,புத்தகம் படிக்க நேர்ந்தபோது சில பல கொட்டாவிகளை தவிர்க்க இயலவில்லை (நேரம் மட்டுமே காரணமல்ல) எதையோ எளிதில் முடித்து விட வேண்டிய அவசரம் எழுத்தில் தெரிந்தது .எந்த ஒரு விசயத்தையும் முழுதாக எழுதவில்லை என்பது என் எண்ணம் ,இந்திராவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்புகளில் சஞ்சய் காந்தியின் திருமண நிகழ்வுகளே இல்லை ,
இப்படி சிலகுறைகள் இருந்தாலும் ஒரு முன்னோட்டமாக அறிந்துகொள்ள உதவும் ,விரிவாக படிக்க வேறு புத்தங்கள் இருந்தால் கூறுங்களேன் ..

இந்த புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்

நல்ல யோசனை ஒன்று :எப்படியும் கல்யாண வீடுகளில் தாம்பூலம் கொடுப்பார்கள் தானே ,அதற்கு பதிலாக என் மணவிழாவிற்கு வருவோர்க்கு நான் ஒரு மரக்கன்று தரலாம் என்றுள்ளேன் என்றார் நண்பர் ,நாமும் செயல்படுத்தலாமே .

No comments:

Post a Comment

என்னைப்பற்றி

My photo
தாராபுரம், திருப்பூர் /தமிழ்நாடு, India